புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை - ஒடிசா கடற்கரையில் நடைபெற்றது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

Update: 2021-07-22 03:48 GMT
தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் நடத்திய இந்த சோதனையில் ஏவுகணையின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்