மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2021-07-21 08:47 GMT
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. மேலும் நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்