நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை தொடங்கியதும், புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மக்களவை தொடங்கியதும், புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக தேர்வான விஜய் வசந்த் உள்ளிட்ட நால்வருக்கு மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதைதொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 40 பேருக்கு மக்களவையில் இரங்கல் குறிப்பு வாசித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்றைய தினம் மக்களவையில், உணவு தொழில்நுட்ப, சுயதொழில் முனைவு மற்றும் மேலாண்மை கழகம் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.