50க்கும் மேற்பட்ட உடலை தகனம் செய்த டெல்லி காவல்துறை

டெல்லியில் போலீசார் ஒருவர் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்ய உதவியுள்ளார்.

Update: 2021-05-06 13:37 GMT
டெல்லி நிஜாமுதீன் பேரக்கில் பணியாற்றும் ராகேஷ் என்ற காவலருக்கு, ஏப்ரல் 13 முதல் எரியூட்டும் இடத்தில் வேலை கொடுக்கப் பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளுக்கு உதவியுள்ள அவர், தனி ஆளாக, 50க்கும் மேற்பட்டோர் உடலை தகனம் செய்துள்ளார். குறிப்பாக இந்த பணிக்காக நேற்று நடைபெறவிருந்த அவரது மகளின் திருமணத்தையும் ராகேஷ் தள்ளி வைத்துள்ளார். கொரோனா நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே செல்ல தயங்கும் மக்கள் மத்தியில், மூன்று குழந்தைகளுக்கு தகப்பனான ராகேஷின் துணிச்சலையும் மனித நேயத்தையும் பாராட்டி டெல்லி காவல்துறை வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்