ஷூவை கடித்ததால் ஆத்திரம் - நாயை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற கொடூரம்

கேரளாவில் வளர்ப்பு நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோ மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற கொடூர வீடியோ பரவி வருகிறது.

Update: 2021-04-18 11:59 GMT
கேரளாவில் வளர்ப்பு நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோ மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற கொடூர வீடியோ பரவி வருகிறது.கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் நாய் ஒன்றை ஸ்கூட்டரில் கட்டி ஒருவர் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் நாய் இழுத்துச் செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதைக்கண்ட விலங்குகள் நல அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை தலையிட்டு விசாரித்தபோது கருனேச்சி பகுதியை சேர்ந்த சேவியர் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. வளர்ப்பு நாய் தன் வீட்டிலுள்ள ஷூவை கடித்ததால் ஆத்திரமடைந்து இவ்வாறு மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதையடுத்து சேவியரை கைது செய்த போலீசார் அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்