ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை: "ஆளுநர் மாளிகையை தமிழ் அலங்கரிக்கிறது" - துணை நிலை ஆளுநர் தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதிதாக திருவள்ளுவர் சிலையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிறுவினார்.

Update: 2021-04-15 03:15 GMT
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதிதாக திருவள்ளுவர் சிலையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிறுவினார். தமிழ் புத்தாண்டை ஒட்டி, சுடுமண் சிற்பக்கலை நிபுணர் பத்மஸ்ரீ முனுசாமியால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் மூலம் ஆளுநர் மாளிகையை தமிழ் அலங்கரித்து கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்