கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது - வெங்கையா நாயுடு வேண்டுகோள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது என்று, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-01-10 04:23 GMT
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது என்று, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். பனாஜியில் நடைபெற்ற கோவா சட்டமன்ற உறுப்பினர்கள் தினவிழாவில் பேசிய அவர், ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு, சட்டமியற்றும் அமைப்புகள் மற்றும் உறுப்பினர்களின் மாண்புகள் காக்கப்படுவது அவசியம் என்று கூறினார். அதிகாரிகள் மற்றும் நீதித்துறையின் முடிவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கும் மக்கள் பிரதிநிதிகள், சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்