புதுவையில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு - துவங்கியது டிக்கெட் முன்பதிவு
புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மத்திய அரசு வழிகாட்டுதல் படி நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மத்திய அரசு வழிகாட்டுதல் படி நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் திரைப்பட ரசிகர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்கும் வகையில் இருக்கைகளை தயார் செய்யப்பட்டுள்ளன,. திரையங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கபட உள்ளனர். மேலும் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்