கொரோனா தடுப்பு பணிகள் - மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50% செலவழிக்கலாம்

கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகள், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத தொகையை செலவழித்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-24 12:23 GMT
கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகள்,  மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத தொகையை செலவழித்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்பு 35 சதவீதம் செலவழித்து கொள்ளலாம் என்று இருந்தது. தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, நேற்று மாநில முதலமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்