போதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்

போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Update: 2020-09-23 10:47 GMT
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து போதைப் பொருள் வழக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பாலிவுட்டில் இந்த விவகாரம் தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கன்னட திரையுலகிலும் ராகினி திவேதி, சஞ்சனா திவேதி உள்ளிட்டோர் கைதாகினர். இந்த சூழலில் நடிகர் சுஷாந்தின் மேலாளர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார். மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்த திரை உலகங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் கோலிவுட்டுக்கும் விசாரணை நீளலாம் என்பதால் இங்குள்ள பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்