"இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள்" - கொரோனா வார்டுகள் நிரம்பியதால் நடவடிக்கை
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுமையாகி நிரம்பி விட்டது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுமையாகி நிரம்பி விட்டது. இதனையடுத்து கூடுதலாக படுக்கைகள் அமைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள மாணவர் விடுதியில் 300 படுக்கைகளையும் மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகளையும் அமைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களை காக்க வைக்க கூடாது எனவும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளை மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவுறுத்தினார்