டெல்லியில் கொட்டித் தீர்க்கும் கனமழை - மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகள்
தலைநகர் டெல்லியில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
தலைநகர் டெல்லியில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. நாடாளுமன்ற பகுதி மற்றும் விஜய் சவுக் பகுதியில் கனமழை நீடிக்கிறது. இடைவிடாது சாரல் மழை கொட்டும் நிலையில், பனி படர்ந்தது போல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் மழை நீர் ஓடிய வண்ணம் உள்ளது. மழை காரணமாக வாகன ஓட்டிகள், மெதுவாக சென்று வருகின்றனர். பைரோஷ் ஷா சாலை, விஜய் சவுக், சாஸ்திரி பவன், அசோக் விஹார் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.