விகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-11 12:52 GMT
விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில், ரவுடி விகாஸ் துபே அம்மாநில போலீசாரால்  என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்,  பி.யூ.சி.எல் என்கிற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இந்த என்கவுண்டருக்கு பின்னால்,  காவல்துறையினர், மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் உள்ளதால், உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்