பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மிதிவண்டி பேரணியில் ஈடுபட்ட லாலுபிரசாத் யாவத் கட்சியினர்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் லாலுபிரசாத் யாவத் கட்சியினர் மிதிவண்டி பேரணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-05 12:36 GMT
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் லாலுபிரசாத் யாவத் கட்சியினர் மிதிவண்டி பேரணியில் ஈடுபட்டனர். பாட்னாவில் நடைபெற்ற இந்த பேரணியில், அவரது மகன்கள்,  தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர், கலந்து கொண்டனர். கட்சி தொடங்கி 24-வது ஆண்டைக்குறிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. நாள் தோறும், உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்