"கொரோனாவால் இறந்தவர்களை மொத்தமாக புதைக்கும் வீடியோ"- பகிரங்க மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்

கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தூக்கி வீசி புதைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-06-30 16:53 GMT
கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தூக்கி வீசி புதைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த 9 பேரின் சடலத்தை, அடக்கம் செய்யும் அம்மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள், மனிதன் இறந்த பிறகு கொடுக்கும் கடைசி மரியாதையை கூட கொடுக்காமல், குழியில்  வீசி செல்லும் காட்சி வைரலானது. ,இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் பகிரங்க மன்னிப்பு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்