இந்தியாவில் கொரோனாவுக்கு குணமடைவோர் 31.7 சதவீதமாக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 31 புள்ளி 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

Update: 2020-05-12 17:29 GMT
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 31 புள்ளி 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஜம்மு காஷ்மீ்ர் யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அவர் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் கொரோனாவுக்கு   உயிரிழப்போர் சதவீதம் 7 முதல் 7 புள்ளி 5 சதவீதமாக உள்ளது என்றார். அதேநேரம், இந்தியாவில் இதுவே 3 புள்ளி 2 சதவீதமாக இருப்பதாக ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.
 

Tags:    

மேலும் செய்திகள்