"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை"
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். பிற மாநில அரசு வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ள அவர், மளிகை , காய்கறி உள்ளிட்ட பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் உரிய பில்களை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.