புற்று நோயாளிகளுக்கு உதவ சிறப்பு முகாம் - தலை முடியை தானம் செய்த அரசு கல்லூரி மாணவிகள்

புதுச்சேரியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு கல்லூரி மாணவிகள், தங்களது தலை முடியை தானமாக வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-13 19:37 GMT
புதுச்சேரியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு கல்லூரி மாணவிகள், தங்களது தலை முடியை தானமாக வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தங்களது தலை முடியை தானமாக வழங்கினர். தானம் பெற்ற முடியில் செய்யப்படும் விக்-குகள், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்