வாடகை இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு - சி.சி.டி.வி. காட்சி, ஜி.பி.எஸ் உதவியுடன் குற்றவாளிகளுக்கு வலை

பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், வாடகை வாகனத்தில் வந்த 2 நபர்கள் அவரை தாக்கி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-13 08:50 GMT
பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் வாடகை வாகனத்தில் வந்த 2 நபர்கள் அவரை தாக்கி  5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவை வைத்து குற்றவாளிகள் வந்தது வாடகை வாகனம் என கண்டறிந்துள்ளனர். அந்த வாகனத்தில் உள்ள ஜி.பி.எ​ஸ். கருவி உதவியுடன் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்