நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி

வரும் குடியரசு தினத்தன்று மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நாடே எதிர்பார்ப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-11 08:27 GMT
வரும் குடியரசு தினத்தன்று, மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்  என நாடே எதிர்பார்ப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பொருளாதார சீர்திருத்தம் மட்டும் நரசிம்மராவ் செய்யவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் காஷ்மீர் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதோடு, பாபர் மசூதி உள்ள இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருந்தால், அந்த நிலத்தை இந்துக்களிடம் அரசு அளிக்கும்  என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தவர் நரசிம்மராவ் என்றும்  சுட்டிக்காட்டி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்