செல்பி எடுக்க ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்கள் : சுற்றுலா பயணிகளின் கண்முன்னே மூழ்கிய இளைஞர்

தெலங்கானாவில் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-13 11:25 GMT
தெலங்கானாவில் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக மகாராஷ்டிராவில் திறக்கப்பட்ட தண்ணீரால், தெலங்கானாவில் உள்ள நாகர்ஜுனா, அணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், செல்பி எடுப்பதற்காக இரண்டு இளைஞர்கள் தண்ணீரின் ஆழப்பகுதியில் இறங்கினர். அப்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் கரையேறிய நிலையில், குண்டூரை சேர்ந்த நரசிம்மன் என்ற இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது. சுற்றுலா பயணிகளின் கண்முன்னே அவர் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்