பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2019-06-16 17:28 GMT
கேரள ஆயுதப்படையில் சவுமியா என்பவர் பயிற்சி காவலராக பணியாற்றி வந்தார். தனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது 3 குழந்தைகளுடன் சவுமியா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுதப்படை பயிற்றுநர் அஜாஸ் என்பவருக்கும் சவுமியாவுக்கும் நட்பாகி நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அஜாஸ் சவுமியாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து அஜாஸ் உடனான தொடர்பை குறைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அஜாஸ், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பயிற்சி காவலர் சவுமியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சவுமியா துடிதுடித்து இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்த அஜாஸை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.  இந்நிலையில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் தான் சவுமியாவை தீ  வைத்து கொளுத்தியதாக அஜாஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்