கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

Update: 2019-06-06 12:17 GMT
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, வெங்கட சுப்பா ரெட்டியாரின் மகனும், மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மாநில காங்கிரஸ் கமிட்டியின் பலத்தால் தான் அவரை எதிர்த்து செயல்படுவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்