பூர்வா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 5 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பூர்வா விரைவு ரயிலில் 12 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-20 05:05 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பூர்வா விரைவு ரயிலில் 12 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி புறப்பட்ட விரைவு ரயில், விபத்தில் சிக்கியுள்ளது.  விபத்தில் காயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாலும், இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்