திருமலையில் குடும்பத்தினருடன் இலங்கை அதிபர் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார்.

Update: 2019-04-17 08:27 GMT
அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு வந்த அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர்  வரவேற்றனர். இன்று காலை மைத்திரிபால சிறிசேனா தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பட்டர்கள், ஸ்ரீரங்கநாயகி மண்டபத்தில் வேத ஆசீர்வாதம்  செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினார். அங்கு இன்று மாலை வரை ஓய்வெடுக்கும் அவர் பின்னர் சிறப்பு விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்