ரஃபேல் விவகாரத்தில் மோடி மீது விமர்சனம் : ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-15 07:15 GMT
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக, உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை திருடன் என நீதிபதியே கூறிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சி எம்.பி. மீனாட்சி லேகி, ராகுல்காந்தி மீது குற்றநடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்