குதிரையில் சென்று தேர்வு எழுதிய மாணவி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த, கிருஷ்ணா என்ற மாணவி, தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-04-10 05:15 GMT
கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த, கிருஷ்ணா என்ற மாணவி, தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. குதிரை சவாரி குறித்து பேசிய அந்த மாணவி, சாதாரண பெண் குதிரை சவாரி செய்ய முடியாது என்றும் ஜான்சி ராணி போன்ற வீரமங்கையால் மட்டும் தான் முடியும் என பலரும் தமக்கு அறிவுரை வழங்கியதாக கூறினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மாணவி கிருஷ்ணாவின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்