நாடு திரும்பிய பாகிஸ்தான் தூதர்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமது டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறபட்டு சென்றார்

Update: 2019-02-19 02:58 GMT
 காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய் பைசாரியாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைத்து ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமதுவை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனைக்கு வருமாறு அழைத்துள்ளளது. அதன்படி சோகைல் முகமது டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்