இடஒதுக்கீடு கோரி போராடும் குஜ்ஜார் சமூகம் : தொடரும் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-02-12 06:32 GMT
கடந்த 8-ம் தேதியில் இருந்து சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டு வரும் அவர்கள், ரயில் தண்டவாளத்தின் மீது கூடாரங்களை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ரயில்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய் மோதோபர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரிலால் பைஸ்லா கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்