திருமலையில் ராஜபக்சே சாமி தரிசனம்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார்.

Update: 2019-02-12 02:13 GMT
இலங்கையில் இருந்து பெங்களூர் வந்த அவர், ரேணிகுண்டா  அழைத்து செல்லப்பட்டார். பின்னர் காரில் அவர் திருமலைக்கு சென்றார்.  இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் உள்ளே ரங்க நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் வழங்கி தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. அவருடன் அவரது கட்சியை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.  வழக்கமாக குடும்பத்தினருடன் திருப்பதி வரும் ராஜபக்சே, இம்முறை கட்சியினருடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்