காஷ்மீர் : 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை வீரர்கள் அதிரடி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2019-02-11 04:00 GMT
குல்கம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, பாதுகாப்பு படையினர் மீது பிரிவினைவாதிகள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில்  துணை ராணுவ படை வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்