மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட முடிவு

பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம்விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2019-01-21 07:10 GMT
பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம்விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என மோடிக்கு வழங்கப்பட்ட ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றை இம்மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணைய தளத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும், நேரடியாகவும், இணையதளம் மூலமும் ஏலம் விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்