பார்வையற்றவர் சபரிமலைக்கு நடந்து சென்று தரிசனம்...

பார்வையற்ற ஒருவர், தன்னந்தனியாக சபரிமலையில் ஏறி, அய்யப்பனை தரிசித்த சம்பவம், சக பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2019-01-12 04:51 GMT
பார்வையற்ற ஒருவர், தன்னந்தனியாக சபரிமலையில் ஏறி, அய்யப்பனை தரிசித்த சம்பவம், சக பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த குமார் எனும் பக்தர், குமுளி வழியாக பேருந்து மூலம், எருமேலி சென்றுள்ளார். அங்கிருந்து பேருந்து பயணமாக பம்பை சென்றார். அங்கிருந்து, நீலிமலை, அப்பாச்சிமேடு மலைப்பாதையில் நடந்து சன்னிதானம் சென்ற அவர் அய்யப்பனை தரிசித்துள்ளார். மீண்டும், அவர் யாருடைய துணையுமின்றி சின்னப்பாதையைக் கடந்து பம்பை வந்துள்ளார். ஏற்ற இறக்கம் மிகுந்த மலைப் பாதையில் பயணித்த பார்வையற்ற குமார், இதுவே, தமக்கு முதல் முறை என்று குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்