இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் : நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உறுதி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த, நார்வே உதவும் என அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-08 12:13 GMT
3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், டெல்லியில் நேற்று நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இந்திய அரசு அனுமதித்தால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினைகளை தீர்க்க, நார்வே அரசு உதவும் எனவும், இருவருக்கும் இடையே மத்தியஸ்தராக இருப்போம் எனவும், எர்னா சோல்பெர்க் உறுதியளித்தார்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பலம் வாய்ந்தவை என்பதால், அவர்களுக்கு இடையே நிலவும் பதற்றத்தை அவர்களாகவே தவிர்க்க முற்படலாம் எனவும் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்