சபரிமலைக்கு செல்வதற்கு வந்த 4 திருநங்கைகள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

Update: 2018-12-16 10:13 GMT
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு திருநங்கைகள் அவந்திகா, அனன்யா, திப்தி, ரேஞ்சுமோல் ஆகியோர் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வதற்காக  எருமேலிக்கு வந்தனர். இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் சபரிமலைக்கு செல்ல தடை விதித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்