லோன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!
கர்நாடகாவில், தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வங்கி மேலாளரை அந்த பெண் அடித்து உதைத்துள்ளார்.
தாவனகெரே நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக 2 லட்ச ரூபாய் கடன் கேட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க தனது ஆசைக்கு இணங்குமாறு மேலாளர் தேவய்யா வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, தேவய்யாவை அந்த பெண் வங்கியில் இருந்து இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.