பள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்

பள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

Update: 2018-10-08 05:10 GMT
பீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் சுவரில், மாணவர்கள் சிலர், மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்தனர்.  மோகன் என்ற மாணவரிடம், இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று, மாணவிகள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மோகன், மாணவிகளை பற்றி ஆபாசமாக பேசியதால், மாணவர் - மாணவிகளிடையே மோதல் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மோகனின் தாயார் உள்பட சில பெண்கள், பள்ளிக்கு வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 30 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில், 14 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்பாங்கா போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்