தெலங்கானா கவுரவ கொலை : முக்கிய குற்றவாளி கைது

தெலங்கானாவில் கூலிப்படை மூலம் மகளின் கணவரை கவுரவ கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பீஹாரில் பிடிபட்டுள்ளான்.

Update: 2018-09-19 05:19 GMT
 நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடா என்ற இடத்தில் கடந்த 14 ம் தேதி பட்டப்பகலில் பிரனாய் நாயக் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் என்பவர் தனது மகள் அமிர்தவர்ஷினியின் கணவரான பிரனாய் நாயக்கை ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் படுகொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

எனது கணவரைக் கொன்றவர்களை தூக்கில் போடுங்கள் - ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி வலியுறுத்தல்

தனது கணவரை கொலை செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் என அமிர்தவர்ஷினி வலியுறுத்தியுள்ளார். மிரியாளகுடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தவர்ஷினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தனது சித்தப்பாவிற்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும்  அவ்வாறு அவர் வெளியே வந்தால் தனது குழந்தைக்கு ஆபத்து நேரும் என்றும் தெரிவித்தார். தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு வரும் 23-ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் பேரணி நடத்தப் போவதாகவும் அமிர்தவர்ஷினி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்