கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 73 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.