அப்துல் கலாமின் சமூக வலைதள கணக்கை திருடியவர்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமூக வலைதள கணக்கை திருடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரிடம் கலாமின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-07-28 11:43 GMT
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தனது டிவிட்டர் கணக்கை, தன்னுடைய பகுதி நேர கல்வி உதவியாளர் பால்சிங் உதவியுடன் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கலாமின் சமூக வலைதள கணக்கை தங்களிடம் ஒப்படைக்கும் படி பால்சிங்கிடம் கலாமின் சகோதரர் தெரிவித்திருந்தார்.ஆனால் பால்சிங், 'கலாம் சென்டர்' என்ற பெயரில் புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கி கலாமை பின் தொடர்ந்த 20 லட்சம் பேரையும் தனது புதிய கணக்கிற்கு மாற்றியுள்ளார். 

இதனையடுத்து பால்சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்