கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

Update: 2018-06-20 06:52 GMT
படகில் கடல் நீர் புகுந்ததால் கடலில் தத்தளித்த சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.  சென்னையில் இருந்து 98
கடல் மைல் தூரத்தில் காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகு என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்தது. இதனையடுத்து படகு பழுதால், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டு சென்னை துறைமுகத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்