பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய பிரதேசத்தில், பையூஜி மகாராஜ் என்ற பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-06-13 06:58 GMT
மத்திய பிரதேசத்தில், பையூஜி மகாராஜ் Bhaiyyu Maharaj என்ற பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 50 வயதான பையூஜிக்கு, மத்திய பிரதேசம், மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பையூஜிக்கு, இணை அமைச்சர் பதவி வழங்குவதாக மத்திய பிரதேச பாஜக அரசு அறிவித்தும், அதை அவர் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. பையூஜி மறைவுக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்