என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் - பயணிகள் அவதி

என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் : 6 மணி நேரம் ரயில் தாமதம் - பயணிகள் அவதி

Update: 2018-06-11 10:06 GMT
என்ஜின் கோளாறு காரணமாக விழுப்புரம் அருகே அனந்தபுரி விரைவு ரயில் பாதியில் நின்றது. 

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி விரைவு ரயில் விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் அருகே வந்தபோது, என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது. இது குறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் பல மணி நேரம் போராடி மாற்று என்ஜின் பொருத்தி பின்னர் ரயிலை இயக்கினர். இதன் காரணமாக விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் பல்லவன், மங்களுரு, வைகை  விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
அனந்தபுரி விரைவு ரயிலின் என்ஜின் கோளாறால், சுமார் 6 மணி நேரம் தாமதமானது. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்