திபுதிபுவென காங். ஆபிஸில் என்ட்ரி.மன்சூர் அலிகான் கொடுத்த ட்விஸ்ட் "மோடியை சிறையில் அடைக்க வேண்டும்"

Update: 2024-04-25 11:51 GMT

மீண்டும் தாய் கழகமான காங்கிரஸ் கட்சியில் இணைய கடிதம் கொடுத்துள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் நிறுவனர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சென்னையில், சத்திய மூர்த்திபவனில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் கூறினார். மேலும், பிரதமர் மோடியை கைது செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அப்போது தான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்