மூச்சுத் திணறலை அடுத்து சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

மூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-09 02:43 GMT
மூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி  நடிகர் சஞ்சய் தத் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என வந்துள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பிற்காக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தாம் நலமாக உள்ளதாக நடிகர் சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்