ஆந்திராவில் மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயி - டிராக்டர் அனுப்பி உதவி செய்த நடிகர் சோனு சூட்

ஆந்திர மாநிலத்தில், மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கிக் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Update: 2020-07-27 08:24 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் என்கிற ஊரில் வசித்து வருகிறார் நாகேஸ்வர் ராவ்.திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த அவருக்கு, ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவகாலம் தொடங்கியுள்ளதால், சொந்த ஊரில் விவசாய வேலைகளை தொடங்குவதற்கு டிராக்டரை வாடகைக்கு அமர்த்த வழியில்லாத வறுமை வாட்டியுள்ளது. உழவு மாடுகளையும் பயன்படுத்த வழியில்லை. இதையடுத்து, விவசாயி நாகேஸ்வர் ராவ், தனது இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அதை தனது டிவிட்ட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்,  ஏர் உழுவதற்கு டிராக்டர் வழங்கப்படும் என்றும், அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்