பவர் ஸ்டார் மனைவியை மீட்டது தனிப்படை
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 8ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில், தனது மனைவி ஜூலியை காணவில்லை என அவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், 5 பேர் கொண்ட தனிப்படை ஊட்டிக்கு விரைந்து சென்று ஜூலியை மீட்டதோடு, ஆலன், ப்ரீத்தி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.