"பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம்" - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ், தாயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் வெற்றியடைந்ததற்கு காரணம் என கூறினார்.

Update: 2018-10-05 07:26 GMT
இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில், கதிர் நடிப்பில், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்" படக்குழுவினர், நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தாயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் வெற்றியடைந்ததற்கு காரணம் என கூறினார்.  பின்னர்  பேசிய பா.ரஞ்சித், சாதிய முரண்களை உடைக்கும் படங்களை, மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்