நடிகை சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க நாகசைதன்யா முடிவு..!
சமந்தாவுக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.
ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத் திரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை சமந்தா. தற்போது அவர் நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்களும் வெளியாகி உள்ளது. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வரும் சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளார். தன் மனைவிக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.