விளையாட்டு திருவிழா - (04.10.2018) மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - புதிய சாதனை படைத்த பிரித்வி ஷா

விளையாட்டு திருவிழா - (04.10.2018) வட சென்னையின் அடையாளம் கால்பந்து
விளையாட்டு திருவிழா - (04.10.2018) மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - புதிய சாதனை படைத்த பிரித்வி ஷா
x
மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - புதிய சாதனை படைத்த பிரித்வி ஷா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 18 வயதே ஆன இந்திய வீரர் பிரித்வி ஷா சதம் விளாசி சாதனை படைத்தார். ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கே.எல். ராகுல் டக்-அவுட் ஆனார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு சதம் விளாசிய இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றார். மேலும் ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை, சர்வதே டெஸ்ட் என களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பிரித்திவி ஷா 134 ரன்களுக்கும், புஜாரா 86 ரன்களுக்கும் ஆட்டமிழக்க , கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். ரஹானே 41 ரன்களில் வெளியேற, ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72 ரன்களுடனும், ரிஷப் பந்த் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


வட சென்னையின் அடையாளம் கால்பந்து

சென்னையின் அடையாளமாகவும், உழைப்பின் அடையாளமாகவும்  விளங்குவது வடசென்னை தான். ஆனால் வட சென்னையின் அடையாளம் திரைப்படத்தில் வருவது போல் அடி தடிகள் அல்ல, கால்பந்து விளையாட்டு தான். வியாசர்பாடி இளைஞர்களை  கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம்கொண்ட தங்கராஜ், உமாபதி, சுரேஷ் ஆகிய மூவரும் தங்களுக்கு தெரிந்த கால்பந்தாட்டத்தை அதற்கு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வியாசர்பாடி முல்லை நகரின் கால்பந்தாட்ட மைதானத்தில் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். 
ஆண்களோடு இளம்பெண்களும், சிறுமிகளும் ஆர்வமுடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். டவுசர்களை அணிந்து விளையாட தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் தற்போது தங்களது திறமையை கண்டு வியப்பதாக கூறுகிறார் கல்லூரி மாணவி பீமாபாய். 

5வது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி


ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து புனே சிட்டி அணி விளையாடியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 ஆவது நிமிடத்திலேயே  புனே அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது. இதே போன்று ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்திலும், 20 ஆவது நிமிடத்திலும் டெல்லி அணியினருக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை  தவறவிட்டனர். 
ஆட்டம் விறுவிறுப்பில்லாமல் இருந்தபோது டெல்லி அணியின் வீரர் ராணா கராமி மைதானத்தின் நடுவில் இருந்து பந்தை தட்டிவிட்டு நேராக கோல் கீப்பருக்கு அடித்தார். இதை எதிர்பார்க்காத  கோல் கீப்பர் செய்வதறியாது திகைத்து நின்றபோது அட்டகாசமாக கோல் விழுந்தது. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணி 1 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் 88 ஆவது நிமிடத்தில் புனே அணியின் டிகோ காரஸ் வெற்றிகரமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து டெல்லி டைனமோஸ் மற்றும் புனே சிட்டி இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.



Next Story

மேலும் செய்திகள்